அரசியல்இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் சென்றடைந்த பின்பே பதவி விலகல்!!

Gotabaya Rajapaksa
Share

மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கு சென்றடைந்த பின்னர், ஜனாதிபதியின் பிரதிநிதியால் பதவி விலகல் கடிதம், சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரியவருகின்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்ட பின்னர், ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான முன்னேற்பாடாகவே கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென அந்த வரட்டாரங்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதம அமைச்சர், சர்வக்கட்சி அரசு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...