image eb20462ab6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சடா முடியுடன் முன்னாள் போராளி மீட்பு!

Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்யில் தற்போது தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார். பின்னர் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்து வந்துள்ளனர்.

பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன்,  உரிய இடத்திற்கே நோய்காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதில் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல், சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார். நாம் அவருக்கு புதிக ஆடைகளை மாற்றி வைத்தியசாலையிலிருந்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், மேலும் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ளோம். என ஜனநாய போராளிகள் கட்சியைச் சேர்ந்த நகுலேஸ் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 76
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து: எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு, இலங்கை...

world 70
செய்திகள்இந்தியா

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக...

world 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர மானியம்: அமைச்சர் சமந்தா வித்யரத்ன

இலங்கையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிகமாக 5,000 ரூபாய் உர மானியம் வழங்க...

world 74
செய்திகள்உலகம்

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ: உலகளவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வுகளால் இந்த ஆண்டு ஆப்பிரிக்கா,...