இலங்கைசெய்திகள்

கோட்டாவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்குமாறு கோரிக்கை

Share
7 54
Share

கோட்டாவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்குமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கடந்த காலங்களில் நாட்டில் சகல விடயங்களிலும் நேரடியான தீர்மானங்களை மேற்கொண்டதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

அவர்கள் எங்கள் தலைவர்கள். அவர்களின் உயிர் ஆபத்தில் இருப்பது குறித்து நாம் அஞ்சுகிறோம்.

கடந்த காலத்தில், இவை அனைத்திற்கும் எதிராக தைரியமாகவும் நேரடியாகவும் முடிவுகளை எடுத்த தலைவர்களை தற்போது சாடாதீர்கள்.

நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபயவிற்கு வழங்கி அவருக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுங்கள். அவர் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து காட்டுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...