Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

கட்சி பேதங்கள் பிரிவினைகள் இன்றி செயற்படுங்கள்! வேலணை பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை

Share

யாழ். மாவட்டத்தில் காணப்படும் உள்ளூராட்சி மன்றங்களில் வினைத்திறன் மிக்க வளமான சபையாக வேலணை பிரதேச சபையை மாற்றியமைக்க அமைந்துள்ள ஆட்சி அதிகார காலத்தை பயன்படுத்திக் கொள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் பிரிவினைகள் இன்றி உழைக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் புதிய அமர்வு தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது.

முன்பதாக வேலணை பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலத்தின் மக்கள் பிரதிநிதிகள் வங்களாவடி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளை தொடர்ந்து பிரதேச சபையின் உத்தியோகத்தர்களால் உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு சபைக்கு அழைத்து வரப்பட்டனர்.

வேலணை பிரதேச சபையின் செயலளர் பிரசன்னத்துடன் ஆரம்பமான முதலாவது சபை அமர்வில் உரையாற்றிய தவிசாளர்,

“எமது வேலணை பிரதேச சபையானது மிகப் பின்தங்கிய ஒரு சபையாக இருக்கின்றது.

அந்த நிலை இனியும் தொடரக் கூடாது என்பதே எமது அனைவரது நிலையாக இருக்கின்றது. அதனடிப்படையில் எமது சபையை வருமானம் கூடிய சபையாக வினைத்திறன் மிக்கதாக பரிணமிக்கச் செய்வது அவசியமாகும்.

அதேபோன்று கடந்த சபையில் நாட்டின் காலத்தில் காலச் சூழலால் பொருளாதார நெருக்கடி போன்ற ஏதுக்களால் பல திட்டங்கள் தடைப்படுப் போயின.

அதனடிப்படையில் கடந்த காலத்தில் முன்னெடுக்காது இருந்த திட்டங்களை நாம் கட்சி பேதங்கள் இன்றி முன்னெடுப்பது அவசியம்” என கூறியள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...