15 13
இலங்கைசெய்திகள்

சீனர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சீனத் தூதரகத்தின் அறிக்கை வெளியானது

Share

சீனர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சீனத் தூதரகத்தின் அறிக்கை வெளியானது

இலங்கையில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, சீன நாட்டவர்கள் பலர் அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் அதேநேரம், அவர்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு, இலங்கை சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட சீன தூதரகம், இந்த சம்பவம், இரண்டு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக சேதப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவில் இதுபோன்ற சம்பவங்களின் நிகழ்வு 2021ஆம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டுள்ளது என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராட மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளுடன், பலனளிக்கும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

உலகமயமாக்கலின் சகாப்தத்தில், எந்த நாடும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. அந்த வகையில் சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன.

அத்துடன், இரண்டு நாட்டு மக்களுக்கும் நன்மைகளை கொண்டு வருவதற்கு, இரண்டு நாடுகளும் எப்போதும் நெருங்கிய நிலையில் செயற்பட்டு வருகின்றன என்றும் சீன தூதரகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....