su
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

Share

இதுவரையில் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளது.
அத்துடன் அதிகரித்துள்ள அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக அரிசி இறக்குமதியை செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுக்குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன இந்தத் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

இன்றுமுதல் வெள்ளைச் சீனி கிலோ ஒன்றின் மொத்த விலையை 135 ரூபா முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யவும் சில்லறை விற்பனையில் 150 ரூபா வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் 976 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியுள்ளன.
இந்த நிலையில் இஅந்தக் கொள்கலன்களை விடுவிக்க 16 மில்லியன் மெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.

இ்ந்த நிலையில் சீனி கொள்கலன்களை விடுவிக்க வெளிநாட்டு இருப்புக்கள் வழங்க நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...