17 1
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

Share

சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி

சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மக்கள் கருத்துக் கணிப்புக்கு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் குறித்து மக்கள் கருத்து கணிப்பை நடத்த உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கூட அரசாங்கத்தால் பெற முடியாது எனவும் எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அதிகாரம் கிடைத்த 17ஆம் திகதி, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அறிவிப்பை ஒத்திவைத்தால், அரசாங்கத்தின் தந்திர வியூகத்தின் வெற்றிக்கு தேவையான கால அவகாசம் வழங்குது போல் ஆகிவிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...