FB IMG 1683096705308
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு பதிவுகள்!

Share
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் தையிட்டி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 27ம் திகதி இடம்பெற்ற நிலையில் அதனுடைய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்தில் சிலநாட்களுக்கு முன் பதிவிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுவர்ண போதொட்ட கலந்து கொண்டு விகாரைக்கான கலசத்தை வைத்துள்ளார்.
இராணுவ இணையத்தளத்தின் பதிவில்,
காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி  வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுவர்ண போதொட்ட சுப நிமிடத்தில், மகா சங்கத்தினரின் ‘பிரித்’ கோஷங்களுக்கு மத்தியில் கலசத்தை வைத்தார்.
யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியின் முயற்சிக்கு அமைய திஸ்ஸ விகாரையின் பிரதமகுருவான கிந்தோட்டை நந்தராம தேரர் விகாரை உருவாக்கப்பட்டது.
பண்டைய திஸ்ஸ விகாரையின் வரலாறு கி.பி 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்ட ஒரு பௌத்த விகாரையாக இயங்குகிறது.  மகாசங்கத்தினர், உத்தியோகத்தர்கள், ஏனைய அணியினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு  வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.  யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினரின் அயராத முயற்சியால் இந்த ஸ்தூபியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தன – என்றுள்ளது.
பொதுமக்களின் காணிகள் வலி வடக்கில் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை முற்று முழுதாக விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், சிறிலங்கா படையினரால் கையகப்பபடுத்தப்பட்டுள்ள நிலங்களில் தமிழர் அடையாளங்களை அழித்து அங்கு பௌத்த சின்னங்களை உருவாக்கி பிரதிஷ்டை செய்யும் செய்பாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இடம்பெறுகின்றன.
FB IMG 1683096722540 FB IMG 1683096687141 FB IMG 1683096702058
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...