செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

வடக்கு இளைஞர்களுக்காக அரை ஏக்கர் நிலத்தை வழங்கத் தயார்- மஹிந்தானந்த அளுத்கமகே

mahindananda aluthgamage
Share

மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியுமென விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர், விவசாயத்துறை அமைச்சரை, சந்தித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயம் செய்வதற்கு ஆர்வமுள்ள வடக்கு இளைஞர்களுக்காக அரை ஏக்கர் நிலத்தை வழங்கவும் அதற்கு தேவையான உரம், நீர், கிருமிநாசினிகள் உள்ளிட்டவைகளை தமது அமைச்சு ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், வட மாகாணத்தில் விவசாயத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் போது, புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் தகுதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...