10
இந்தியாஇலங்கைசெய்திகள்

மோடியின் வருகையின் போது இலங்கையிடம் முன்மொழியப்பட்ட முக்கிய திட்டம் நிலுவையில்..

Share

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, இலங்கையுடன் நில இணைப்புத் திட்டத்தை இந்தியா மீண்டும் முன்மொழிந்துள்ளது.

எனினும், இலங்கை அரசாங்கம், அது தொடர்பில் இன்னும் உறுதியளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

2002 ஆம் ஆண்டில், அப்போதைய இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையில் ஒரு நிலப் பாலத்தை முன்மொழிந்தது.

அது ராமர் சேது அல்லது ஆதாமின் பாலம் என்று அழைக்கப்படும் பண்டைய நில இணைப்பை அடிப்படையாகக் கொண்டது. திட்டத்தின் படி, வீதி மற்றும் தொடருந்து பால இணைப்புகளை உருவாக்க முன்மொழியப்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் மீண்டும் இந்தத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அந்த விடயம், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்த தரைப்பாதை விடயம் சேர்க்கப்படவில்லை.

இதனையடுத்தே, பிரதமர் மோடியின், அண்மைய இலங்கை வருகையின் போது, இந்தியத் தரப்பு அதை முன்மொழிந்தது. எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு உடனடியாக அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், பிரதமர் மோடி, இந்தியப் பெருங்கடலில் 48 கிலோமீற்றர் வரை பரந்து விரிந்திருக்கும் இயற்கை சுண்ணாம்புப் பாறைகளின் பரந்த சங்கிலியான ஆதாமின் பாலம் என்றும் அழைக்கப்படும் ராமர் சேதுவையும் தரிசனம் செய்தார்.

இந்தப் பழங்கால நிலப் பாலம்,புவியியல், வரலாற்று மற்றும் புராண முக்கியத்துவத்துவத்தை கொண்டுள்ளது. இந்த பழங்கால சுண்ணாம்புப் பாலம் இராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதேவேளை முன்மொழியப்பட்ட எட்கா என்ற பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே ஆடை ஏற்றுமதி ஒதுக்கீட்டை 50 மில்லியன் அலகுகளாக அதிகரிக்க வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 44 சதவீத வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது வரிகளுடன் போராடும் வணிகங்களை காப்பாற்றுவதற்கான புதிய வழிகளை இலங்கை தற்போது ஆராய்ந்து வருகிறது.

இதனடிப்படையிலேயே, இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதி செய்வதற்கான ஒதுக்கீட்டை தற்போதைய 8 மில்லியனில் இருந்து 50 மில்லியன் அலகுகளாக விரிவுபடுத்துமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எட்கா தொடர்பான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கும்; போதே, இலங்கையின் கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...