ravi 1
இலங்கைசெய்திகள்

திலீபனை நினைவேந்த ரவிகரனுக்கு தடையுத்தரவு!

Share

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தியாக தீபம் திலீபனுடைய 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வை மேற்கொள்ளவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதிவான் நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ரவிகரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த தடையுத்தரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இன்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் வீட்டுக்கு நேரில் சென்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸார் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் ஊடாக திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்ள தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2021 09 25 at 2.20.16 AM 1 WhatsApp Image 2021 09 25 at 2.20.16 AM 2 WhatsApp Image 2021 09 25 at 2.20.16 AM

Share

1 Comment

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...