5 48
இலங்கைசெய்திகள்

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

Share

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950 ரூபாவிலும் 5000 ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்த வருட சம்பள அதிகரிப்பாகக் கிடைக்கிறது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும் போது, அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்குத் தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர். தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.

இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...