இலங்கைசெய்திகள்

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

Share
5 48
Share

ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்

அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950 ரூபாவிலும் 5000 ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்த வருட சம்பள அதிகரிப்பாகக் கிடைக்கிறது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும் போது, அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்குத் தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர். தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.

இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...