Ranjan ramanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

ரஞ்சன் விடுதலை! – ஏற்பாடுகள் தீவிரம்

Share

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரையை, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனை மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தின் அறிக்கை என்பவற்றை பெற்று, ஆராய்ந்த பின்னரே, – ‘பொதுமன்னிப்புக்கான’ பரிந்துரையை நீதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

” பொதுமன்னிப்பு நடைமுறை உரிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே சட்டமா அதிபரிடம் ஆலோசனையும், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் அறிக்கையும் பெறப்பட்டது. இவற்றை ஆராய்ந்த பின்னர் நிபந்தனை ஒன்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தண்டனை, அரசியல் பழிவாங்கல் அல்ல, நீதிமன்றத்தை அவமதித்தமைக்காகவே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, நீதிமன்றம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்காக ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புகோரி, நீதிமன்றத்துக்கு சத்தியக்கடதாசியொன்றை வழங்க வேண்டும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட நகர்வு இடம்பெறும்.

பொதுமன்னிப்பு தொடர்பிலும், அதற்கான காலப்பகுதி சம்பந்தமாகவும் ஜனாதிபதியே முடிவெடுப்பார்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கால கடூழிய சிறை தண்டனை 2021 ஜனவரி மாதம் விதிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காகவே குறித்த தண்டனையை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன்பின்னர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழந்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் பல தரப்புகளும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...