ranchqan
அரசியல்இலங்கைசெய்திகள்

மன்னிப்பு கடிதத்தில் கையொப்பமிட்டார் ரஞ்சன்

Share

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையொப்பமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு நீதி அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னிப்புக் கடிதம் அவரது சட்டத்தரணிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு பல தரப்பினர் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதித்துறை தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரி, நீதிமன்றில் சத்தியக் கடதாசி சமர்ப்பித்ததன் பின்னர், பொது மன்னிப்புக்கான பரிந்துரையை முன்வைப்பது சிறந்தது என நீதி அமைச்சர் அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கையொப்பமிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...