விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ரணில் வழங்கிய மன்னிப்பு! கொந்தளித்த நாமல்
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ரணில் வழங்கிய மன்னிப்பு! கொந்தளித்த நாமல்

Share

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ரணில் வழங்கிய மன்னிப்பு! கொந்தளித்த நாமல்

சிறையில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் அதேநேரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில்,

விடுதலை புலிபயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை நான் பார்த்தேன். குறிப்பாக, மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

அந்த புலிச் சந்தேக நபர்களுடன் நானும் மகசின் சிறைச்சாலையில் இருந்தேன்.

நான் விளக்கமறியலில் இருந்த நேரம் அது. 15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை அதிபர் திட்டமிட்டு மன்னிப்பதாலோ அல்லது விடுதலை செய்வதாலோ பிரச்சினை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...