“இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்.”
– இவ்வாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா செல்லக்கூடும் என அறியமுடிகின்றது.
ரணிலை நேரில் சந்தித்து இதற்கான அழைப்பை இந்தியத் தூதுவர் விடுப்பார் எனத் தெரியவருகின்றது.
இந்தியா செல்லும் ரணில், அங்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இலங்கை நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.
#SriLankaNews
Leave a comment