rtjy 115 scaled
இலங்கைசெய்திகள்

பயணப் பாதையை மாற்றிய ரணில்

Share

பயணப் பாதையை மாற்றிய ரணில்

மட்டக்களப்பு நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு அஞ்சி பிரதான வீதியுடாக செல்வதை தவிர்த்து ஊர்வீதிகளுக்குள்ளால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை காணிகள் பெரும்பான்மை சிங்களவர்களினால் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கடந்த 23நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

இந்த நிலையில் மட்டக்களப்புக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க நேற்றும் இன்றும் மட்டக்களப்பு பாசிக்குடாவில் தங்கியிருந்து இரண்டு பாடசாலை நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம்(07.10.2023) மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.

இந்நிலையில், அந்த வீதியால் பெருமளவான பொலிஸார் போராட்டம் நடைபெறும் இடங்களில் குவிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பல பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பெருமளவான பொலிஸ் அதிகாரிகளும் வருகைதந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அடிக்கடி ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினரும் வருகைதந்து போராட்டம் நடைபெறும் இடத்தினை பார்வையிட்டுச்சென்றதுடன் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை திடீரென போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்ற பொலிஸார் போராட்டத்தின் முன்பாக வரிசையில் நின்று பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

இதன்போது உடனடியாக பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸாரை அங்கிருந்துசெல்லுமாறு உயரதிகாரிகளினால் பணிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி உள்வீதியினால் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

“ஒரு நாட்டின் மக்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கும் நிலையில் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் செல்லும் ஜனாதிபதியினால் நாட்டின் பிரச்சினையை எவ்வாறு தீர்க்க முடியும்” என போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...