முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை அவர் சிஐடியில் முன்னிலையாவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நாட்டுக்கு இறக்குமதி செய்த தரமற்ற மருந்து வகைகள் தொடர்பான விசாரணைக்காக இவ்வாறு ரணில் விக்ரமசிங்க சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியதன் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.