tamilnis 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பொது வேட்பாளரை அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி

Share

பொது வேட்பாளரை அறிவித்த ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் முதலாவது கூட்டம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது முன்னணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி விக்ரமசிங்க நிச்சயமாக நிறுத்தப்படுவார் என தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

நெருக்கடி காலத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தவறியதற்கு வேறு எந்தக் கட்சித் தலைவர்களையும் குற்றம் சொல்லப் போவதில்லை என்றும் அவர்களால் செயல்பட முடியவில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தலைவர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவ்வான் விஜேவர்தன, உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...