24 6657ed7e23ed8
இலங்கைசெய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து ரணில் நெகிழ்ச்சி

Share

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து ரணில் நெகிழ்ச்சி

யுத்தம் மற்றும் காலிமுகத்திடல் (Galle Face) போராட்டங்களின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறப்பாக செயற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

எனவே, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் திட்டத்தை அறிவிக்கவில்லை.

தற்போது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் சில மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்கள் பல்வேறு மாகாணசபைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுக்களும் இதற்காக செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும் நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் படிப்படியாக நாடாளுமன்றத்திற்கு மாற்றப்படும்.

அதேவேளை, ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய சட்டங்களை இயற்றுவது மிகவும் அவசியமானது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...