24 6657ed7e23ed8
இலங்கைசெய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து ரணில் நெகிழ்ச்சி

Share

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து ரணில் நெகிழ்ச்சி

யுத்தம் மற்றும் காலிமுகத்திடல் (Galle Face) போராட்டங்களின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறப்பாக செயற்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

எனவே, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் திட்டத்தை அறிவிக்கவில்லை.

தற்போது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் சில மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்கள் பல்வேறு மாகாணசபைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுக்களும் இதற்காக செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும் நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் படிப்படியாக நாடாளுமன்றத்திற்கு மாற்றப்படும்.

அதேவேளை, ஜனாதிபதி, நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய சட்டங்களை இயற்றுவது மிகவும் அவசியமானது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...