24 6657f1ef8bc96
இலங்கைசெய்திகள்

சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு

Share

சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரிப்பு

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் புகைப்பழக்கம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13 முதல் 15 வயது வரையிலான பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தரம் 9, 10 மற்றும் 11ல் கற்கும் மாணவர்களில் 5.7 வீதமானவர்கள் ஒரு தடவையேனும் புகைபிடித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களில் 3.7 வீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் கூடுதலாக ஈ சிகரட் வகைகளை புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின் புகைப்பழக்கம் தொடர்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

புகைப்பழக்கத்தினால் சுவாச மற்றும் புற்று நோய்கள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...