5 6
இலங்கைசெய்திகள்

விஜித ஹேரத்தின் கூற்றுக்கு ரணில் தரப்பு கடும் எதிர்ப்பு

Share

விஜித ஹேரத்தின் கூற்றுக்கு ரணில் தரப்பு கடும் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் முன்வைத்த கூற்றை ரணில் தரப்பு முற்றாக மறுத்துள்ளது.

மத்திய வங்கியின் திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹேரத், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் தடையின்மை சலுகையினால், சட்ட நடவடிக்கைகள் முன்னர் ஸ்தம்பிதமடைந்திருந்ததாக குற்றம் சுமத்தியிருந்தார்.

எவ்வாறாயினும், இந்த கூற்றுக்களை முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விக்ரமசிங்க ஒருபோதும் ஜனாதிபதியின் தண்டனையின்மை சலுகையை(immunity) கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தண்டனையின்மையை கோருவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும், அத்துடன் உண்மையில், அத்தகைய கோரிக்கையை அவர் ஒருபோதும் முன்வைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தனுஸ்க ராமநாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான  வழக்கில் முன்னாள் ஜனாதிபதி  சாட்சியாக கூட குறிப்பிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூற்று, வேண்டுமென்றே ஊடகங்கள் உட்பட முழு பொதுமக்களையும் தவறாக வழிநடத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

எனவே பொறுப்புள்ள அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர், தெரிந்தோ தெரியாமலோ பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது பொருத்தமற்றது என்றும் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...