17 1
இலங்கைசெய்திகள்

சஜித்தை சந்தித்த நாமல் : கேள்வி எழுப்பியுள்ள ரணிலின் ஆலோசகர்

Share

சஜித்தை சந்தித்த நாமல் : கேள்வி எழுப்பியுள்ள ரணிலின் ஆலோசகர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்ததாக கூறப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆசு மாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இதன் பின்னணியில் உள்ள உண்மையை பிரேமதாச வெளிப்படுத்த வேண்டும் என ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் நாட்களில் பரபரப்பான செய்திகள் வரும் என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றார் என்றும் மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வோட்டர்ஸ் எட்ஜில் இருந்து வெளியே வந்ததை சில ஊடகவியலாளர்கள் பார்த்தமைப் போன்ற நாடகங்களை விரைவில் பார்க்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...