24 66a44c3c2c213
இலங்கைசெய்திகள்

தமிழர் பெருந்தோட்டங்களை நவீன மயப்படுத்தும் வரைபடத்தை வெளியிட்ட ரணில்

Share

தமிழர் பெருந்தோட்டங்களை நவீன மயப்படுத்தும் வரைபடத்தை வெளியிட்ட ரணில்

நாட்டின் காலாவதியாகியுள்ள பெருந்தோட்டத் துறையை நவீன மற்றும் செழிப்பான விவசாய வணிகமாக மாற்றுவதற்கான வரைபடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) வெளியிட்டுள்ளார்.

இந்த மூலோபாயத்தின் முக்கிய தூண்களில், காலனித்துவ காலத்தின் ‘லைன்-ரூம்’ வரிசை வீடுகள் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் தோட்ட நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சாத்தியமான வருவாய் பகிர்வு மாதிரி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

“எங்களுக்கு தோட்டங்கள் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு செழிப்பான விவசாய வணிகம், நிறைய நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் ஒரு பெரிய நிர்வாக நிறுவனம் தேவை, அதில் இருந்து அதிக வருமானம் கிடைக்கும். இதற்காக நாங்கள் உள்ளே இருந்து சீர்திருத்தங்களைத் ஆரம்பிக்கப்போகிறோம்” என்று ஜனாதிபதி விக்ரமசிங்க நேற்று (26.07.2024) கொழும்பில் சர்வதேச தேயிலை மாநாடில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இதன்படி, எல்லா லைன் அறைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அரசாங்கத்துக்கு பொறுப்பெடுத்து, அவற்றை கிராமங்களாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ‘லைன்-ரூம்’ கலாசாரம், நுவரெலியாவில் உள்ள பல பரிமாண வறுமைக் குறிகாட்டிகளின் உயர் வீதத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விட இது அதிகமாக உள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...