எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்

Share

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்

திர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து தமக்கு உடனடியாக அறிக்கை தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்னநாயக்க உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த விடயம் குறித்து அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவைப்படும் நிதி தொடர்பில் ஓர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய, வரவு செலவு திட்டத்தில் அதனை உள்ளடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீட்டு தொடர்பில் நிதி அமைச்சுடனும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் செலவு விவரங்களை நிதி அமைச்சுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார் என கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாகும் தொகையை மதிப்பீடு செய்து அதனை கூடிய விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...