அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் முன்பு போல இல்லை! – கூறுகிறார் நாமல்

Share
namal
Share

‘பொடி மைனா’ என்று தன்னை அழைப்பதற்கு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணையத்தைப் பயன்படுத்தி அவரே தாக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

இணையத்தில் மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் தன்னை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிப்பதாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, தன்னை மஹிந்த ராஜபக்ஷவின் மகனாக மக்கள் ஏற்றுக்கொண்டமையால் தான் மகிழ்ச்சி அடைவதாக சுட்டிக்காட்டினார்.

2005ஆம் ஆண்டு 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இணையம் இருந்ததாகவும் மஹிந்த அறிமுகப்படுத்திய இணையத்தை இன்று மக்கள் பயன்படுத்தி அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்கின்றனர் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியினர் குழப்பமடைந்தாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை என குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகுக்கு விசுவாசமாக இல்லை என்றும் அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, மனித உரிமைகளை மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலை துடைத்தெறிந்தாகவும் அவர் மனித உரிமைகள் பற்றி இப்போது பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...