tamilnif 19 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் சித்து விளையாட்டுகளால் சிதறடிக்கப்படும் ராஜபக்ச குடும்ப அரசியல்

Share

ரணிலின் சித்து விளையாட்டுகளால் சிதறடிக்கப்படும் ராஜபக்ச குடும்ப அரசியல்

சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த காலங்களில் பலமிக்க கட்சியாக தனித்துவமாக விளங்கிய பொதுஜன பெரமுன கட்சி தற்போது பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளன.

ரணிலின் அரசியல் சாணக்கிய விளையாட்டுக்களால் ராஜபக்சர்களின் அடுத்தகட்ட அரசியல் கனவுகள் சிதைந்து போகும் அளவுக்கு வீழ்ச்சி நிலையை நோக்கி நகர்த்து வருகின்றன.

பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினர்களை பிளவுபடுத்துவதன் மூலம் அந்தக் கட்சியை பலவீனப்படுத்தும் காய்நகர்த்தல்களை ரணில் திறமையாக மேற்கொண்டு வருகிறார்.

ரணிலின் நரித்தனத்திலிருந்து தமது கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்கும் தீவிர போராட்டத்தில் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான தாரக பாலசூரிய மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரையும் தனது தேவைக்காக ரணில் தன்னுடன் அழைத்துள்ளார்.

பசில் ராஜபக்ச இலங்கை வந்த பிறகு ரணில் விக்ரமசிங்கவுடன் அதிகார பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் வெல்வதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பசிலுடன் நெருக்கமாக இருந்த நிமல் லான்சா, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூட பசில் ராஜபக்சவை விட்டு விலகி ரணிலுடன் நெருக்கமாகிவிட்டனர்.

அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமித பண்டார தென்னகோன், கனக ஹேரத், காஞ்சன விஜேசேகர ஆகியோருடன் பொதுஜன பெரமுன கட்சியின் 70 பேர் ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி திரண்டுள்ளதாக சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...