tamilnif 19 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் சித்து விளையாட்டுகளால் சிதறடிக்கப்படும் ராஜபக்ச குடும்ப அரசியல்

Share

ரணிலின் சித்து விளையாட்டுகளால் சிதறடிக்கப்படும் ராஜபக்ச குடும்ப அரசியல்

சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

கடந்த காலங்களில் பலமிக்க கட்சியாக தனித்துவமாக விளங்கிய பொதுஜன பெரமுன கட்சி தற்போது பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டுள்ளன.

ரணிலின் அரசியல் சாணக்கிய விளையாட்டுக்களால் ராஜபக்சர்களின் அடுத்தகட்ட அரசியல் கனவுகள் சிதைந்து போகும் அளவுக்கு வீழ்ச்சி நிலையை நோக்கி நகர்த்து வருகின்றன.

பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினர்களை பிளவுபடுத்துவதன் மூலம் அந்தக் கட்சியை பலவீனப்படுத்தும் காய்நகர்த்தல்களை ரணில் திறமையாக மேற்கொண்டு வருகிறார்.

ரணிலின் நரித்தனத்திலிருந்து தமது கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்கும் தீவிர போராட்டத்தில் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான தாரக பாலசூரிய மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரையும் தனது தேவைக்காக ரணில் தன்னுடன் அழைத்துள்ளார்.

பசில் ராஜபக்ச இலங்கை வந்த பிறகு ரணில் விக்ரமசிங்கவுடன் அதிகார பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் வெல்வதற்கான போட்டியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பசிலுடன் நெருக்கமாக இருந்த நிமல் லான்சா, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூட பசில் ராஜபக்சவை விட்டு விலகி ரணிலுடன் நெருக்கமாகிவிட்டனர்.

அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமித பண்டார தென்னகோன், கனக ஹேரத், காஞ்சன விஜேசேகர ஆகியோருடன் பொதுஜன பெரமுன கட்சியின் 70 பேர் ரணில் விக்கிரமசிங்கவை சுற்றி திரண்டுள்ளதாக சில அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...