தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாளை பதவி விலகவுள்ளார். இது தொடர்பான கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் எனவும், அவரது பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் எனவும், அதுவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசமைப்பின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment