image 8a843650a4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் பேரணி

Share

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து யாழ் மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பித்த பேரணி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படிச் சந்தியை அடைந்து, பிரதான வீதியை ஊடாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

பேரணியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14 ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், மக்களிடையே நீரிழிவு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையால் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...