3 45
இலங்கைசெய்திகள்

கோட்டாபய மீதான அவமதிப்பு குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சருக்கு விடுதலை

Share

கோட்டாபய ராஜபக்சவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பான விசாரணைகள் இன்று (29.11.2024) இடம்பெற்ற நிலையிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு அமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷ்சங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்குதல், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஊழல் செயலைச் செய்தமை தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...