IMG 20220516 WA0002
அரசியல்இலங்கைசெய்திகள்

காணாமல்போன ராஜபக்சக்களின் நாய்க்குட்டி ஜ.ம.ச உறுப்பினர் வீட்டில்!

Share

ராஜபக்சக்களின் வீரகெட்டிய, வளவுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, காணாமல்போன நாய் குட்டியொன்று, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டின் முன் இருந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்ததாக அந்த யுவதி கூறிய போதிலும் ,கார்ல்டன் தோட்ட பாதுகாப்பு அதிகாரிகள் யுவதியை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி ராஜபக்சக்களின் சொத்துகள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது, இந்த நாய் குட்டியை அந்த யுவதி எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

தாக்குதலுடன் அவர் தொடர்புபட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...

MediaFile 2 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிவேக வீதியில் அதிரடிச் சோதனை: கடவத்தை நுழைவாயிலில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதிகளில் இன்று (18)...

image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள...

arast 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை...