19 4
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பை சீண்டிப் பார்க்கும் நாமல்

Share

ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான டொலர்கள்! அநுர தரப்பை சீண்டிப் பார்க்கும் நாமல்

உகண்டாவில் ராஜபக்சக்கள் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான டொலர்களை மீட்பதற்காக அரசாங்கத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உகண்டாவில் நாங்கள் பணத்தை மறைத்து வைத்துள்ளோம் என்று யாரேனும் கூறினால், அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து வெளிநாடுகளின் கடனை அடைத்து விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இருந்து சீஷெல்ஸ் மற்றும் உகண்டாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் பணத்தை இந்த அரசாங்கத்தினால் மீளக் கொண்டுவர முடியும் என தாம் நம்புவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்னும் சிறிது நாட்களின் பின்னர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய ராஜபக்சர்கள் நாட்டில் இருந்து கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கும் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வசந்த சமரசிங்க நேற்றையதினம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், நீதிமன்றம் இது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சில நாட்கள் பொறுத்திருக்குமாறும் அதன் பின்னர் மறைக்கப்பட்ட பணம் தொடர்பில் வெளிக்கொண்டு வரப்படும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இதற்கு முன்னரான நாட்களில் ராஜபக்சக்கள் உகண்டாவில் மறைத்து வைத்திருப்பதாக கூறப்படும் பணம் தொடர்பில் புதிய அரசாங்கம் உண்மையை நிரூபிக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் சவால் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...