FONRw7mhqnE0G1JSJ7JZ 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தளத்தில் மழை வெள்ளம் – 1012 பேர் பாதிப்பு!

Share

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை  காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இன்று மாலை வரை 274 குடும்பங்களைச் சேர்ந்த 1012 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர  அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாரக்குடிவில்லு மற்றும் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்புக்குளி மற்றும் அங்குனவில உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், முந்தல் பிரதேசத்தில் தற்காலிக முகாம் ஒன்றும். அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் வசதி மற்றும் மருத்துவ சேவைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தல் பிரதேச செயலகத்துடன் இணைந்து முப்படகயினரும், சுகாதார பிரிவினரும், பிரதேச சபை உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒன்றிணைந்து முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உதவிகளை செய்துவருகின்றனர்.

அத்தோடு, இன்னும் சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும், தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுருஓயாவின் 4 வான் கதவுகள் 2 அடி வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.

​#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...