FONRw7mhqnE0G1JSJ7JZ 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புத்தளத்தில் மழை வெள்ளம் – 1012 பேர் பாதிப்பு!

Share

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை  காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இன்று மாலை வரை 274 குடும்பங்களைச் சேர்ந்த 1012 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர  அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாரக்குடிவில்லு மற்றும் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்குட்பட்ட செம்புக்குளி மற்றும் அங்குனவில உள்ளிட்ட கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், முந்தல் பிரதேசத்தில் தற்காலிக முகாம் ஒன்றும். அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் வசதி மற்றும் மருத்துவ சேவைகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தல் பிரதேச செயலகத்துடன் இணைந்து முப்படகயினரும், சுகாதார பிரிவினரும், பிரதேச சபை உட்பட அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒன்றிணைந்து முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உதவிகளை செய்துவருகின்றனர்.

அத்தோடு, இன்னும் சிலர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும், தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தெதுருஓயாவின் 4 வான் கதவுகள் 2 அடி வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.

​#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...