இலங்கைஅரசியல்செய்திகள்

அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

Bus fares
Share

அரச மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் இன்று போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது பஸ் கட்டணம் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, அரச மற்றும் தனியார் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணத்தை 14 ரூபாவிலிருந்து 17 ரூபாவரை அதிகரிப்பதற்கும், ஏனைய கட்டணங்களை 17 வீதத்தால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 05 ஆம் திகதி முதல் புதிய பஸ் கட்டணம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே, பஸ் கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...