Provincial Council election 1
இலங்கைசெய்திகள்

விரைவில் மாகாணசபைத் தேர்தல்!

Share

மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை அரசுக்கு, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (29) மாலை கொழும்பில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர், கூட்டணியின் செயலாளர் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நிலைவரம், மலையக மக்களுக்கான உதவித் திட்டங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா, பொருளாதார ரீதியில் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள், இலங்கை மக்களுக்கான இந்திய உதவிகள் தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு, தம்மால் முடிந்த அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,

“வடக்கு , கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியிடம் இல்லை. எனவே, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இதற்கான நிதி பங்களிப்பை தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும்.

இலங்கையின் தற்போதைய அரசுமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. தேசிய மட்டத்திலான தேர்தலை நடத்தி மக்களின் மனநிலையை அறிய ஜனாதிபதியும் தயாராக இல்லை.

எனவே, 9 மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்மூலம் மக்கள் ஆணையை அறியலாம். ஜனாதிபதி தரப்புக்கு மக்கள் ஆணை வழங்கினால் அவர் பதவி தொடரலாம். இல்லையேல் வெளியேற வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68391c518038f
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் விரைவில் கைச்சாத்திடும் இலங்கை

அமெரிக்கா, இலங்கை மீது விதித்த கட்டணக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான, இரண்டாவது உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வோசிங்டனில்...

25 6839329e68755
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் சிறப்பு தூதர் முன்கொணர்ந்த ஒப்பந்தம்: ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் முன்கொணர்ந்த ஒப்பந்தத்தை...

25 68392050e9f7e
இலங்கைசெய்திகள்

மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகளுக்கு, உடனடி இடமாற்றங்களை இலங்கை பொலிஸ் தலைமையகம்...

25 68392036c28da
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில்...