IMG 20230525 WA0082
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Share

வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் வறிய மாணவர்களுக்கான நான்கு லட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் குருநகர் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலையில் தரம் எட்டு முதல் பதினொன்று வரை கல்விகற்கின்ற 125 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்விற்கான நிதி அனுசரணையை எச்.எஸ்.பி.சி வங்கி வழங்கியதுடன் நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எச்.எஸ்.பி.சி வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சேர்ஜினர், பாடசாலை அதிபர் திருமதி ஜஸ்ரின் பிறின்ஸ்லி கிறிஸ்ரபெல்,  ஆசிய பசுபிக் பிராந்திய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அமைப்பின் யாழ் – கொழும்பு பணியாளர்கள் மற்றும் எச்.எஸ்.பி.சி வங்கி பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டில் இடம்பெறும் அசாதாரண சூழ்நிலை மற்றும் பொருளாதாரச் சிக்கல்களால் கல்விப்புலத்தில் மாணவர்கள் நாள்தோறும் எதிர்நோக்கும் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான உதவிகள் அவர்களுக்கான கல்விக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிவருகிறது என இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியிருந்த பாடசாலை அதிபர் திருமதி ஜஸ்ரின் பிறின்ஸ்லி கிறிஸ்ரபெல் கூறியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் விருந்தினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்து பாடசாலை முன்றலில் “நாளைய பசுமைக்காக” எனும் தொனிப்பொருளில் கொய்யா, மாதுளை மற்றும் கொடித்தோடை போன்ற பழமரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...