276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பொறுப்பேற்கலாம்! – எதிரணிக்கு சவால்

Share

” நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவே இருக்கின்றார். எனவே, எதிரணி சாதாரண பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பொறுப்பேற்கலாம்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி இடைக்கால அரசை ஏற்படுத்துவதற்கு தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு எழுதிய கடிதத்திலும் அவர் அவ்விடயத்தை எடுத்துரைத்திருந்தார். ஆட்சி மாற்றத்துக்கு அவர் தடையாக இருக்கவில்லை. அரச தலைவராக நம்பகத்தன்மையுடன் செயற்பட்டுவருகின்றார்.

நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது பற்றி ஜனாதிபதி எனக்கும் தனிப்பட்ட ரீதியில் தெரியப்படுத்தியுள்ளார்.

பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியில்தான் தீர்வு காணவேண்டும். இடைக்கால சர்வக்கட்சி அரசுக்கு ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால், ஆட்சி மாற்றத்துக்கு ஜனாதிபதி எதிராக இருக்கமாட்டார்.” – என்றார்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...