276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பொறுப்பேற்கலாம்! – எதிரணிக்கு சவால்

Share

” நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி தயாராகவே இருக்கின்றார். எனவே, எதிரணி சாதாரண பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை பொறுப்பேற்கலாம்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி இடைக்கால அரசை ஏற்படுத்துவதற்கு தான் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு எழுதிய கடிதத்திலும் அவர் அவ்விடயத்தை எடுத்துரைத்திருந்தார். ஆட்சி மாற்றத்துக்கு அவர் தடையாக இருக்கவில்லை. அரச தலைவராக நம்பகத்தன்மையுடன் செயற்பட்டுவருகின்றார்.

நாடாளுமன்றத்தில் இணக்கப்பாடு இருந்தால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம். இது பற்றி ஜனாதிபதி எனக்கும் தனிப்பட்ட ரீதியில் தெரியப்படுத்தியுள்ளார்.

பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியில்தான் தீர்வு காணவேண்டும். இடைக்கால சர்வக்கட்சி அரசுக்கு ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால், ஆட்சி மாற்றத்துக்கு ஜனாதிபதி எதிராக இருக்கமாட்டார்.” – என்றார்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...