17 4
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

Share

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டமொன்று இன்றையதினம்(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்துள்ளனர்.

இந்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல்களில் காணப்படும் இடர்பாடுகளால் பல மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி வேறு பாடசாலைக்கு சென்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னதாக பாடசாலையில் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அங்கு வந்த பாடசாலை அதிபர் மாணவர்களை தாக்கியதை அடுத்து பெற்றோருக்கும் பாடசாலை சமூக்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டடதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...