ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
கொழும்பை மையப்படுத்தி பிரதான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலையகத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மக்களின் இந்த போராட்டங்களுக்கு சர்வமதத் தலைவர்கள், சிவில் அமைப்பினர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பனவும் போராட்டத்தை ஆதரித்து வீதிகளில் இறங்கவுள்ளன.
#SriLankaNews
Leave a comment