பிரசன்ன வீட்டையும் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

பிரசன்ன ரணதுங்க

பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரியும் தற்போதைய அரசுக்கு எதிராகவும் மினுவாங்கொடை உடுகம்பொல புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இருந்து இன்று ஊர்வலமும் வாகனப் பேரணியும் ஆரம்பமானது.

போராட்டக்காரர்கள் மினுவாங்கொடையை வந்தடைந்ததையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#SriLankaNews

Exit mobile version