செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அரசுக்கு எதிராகத் தீப்பந்தப் போராட்டம்!

3
Share

பண்டாரவளை மாநகரில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினரால் பாரியளவிலான தீப்பந்தப் போராட்டம் நேற்றிரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை நடத்தப்பட்டது.

அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஆண்களும், பெண்களுமாகப் பெருந்திரளானோர் தீப்பந்தங்களுடன் பங்கேற்றனர்.

பண்டாரவளை மாநகர சபை மைதானத்திலிருந்து, போராட்டக்காரர்கள் பேரணியாகப் பண்டாரவளை மாநகர் வழியாக, அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் மூன்று மணி நேரமாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணி நேரம் தடைப்பட்டு, வாகன நெரிசல்களும் இடம்பெற்றிருந்தன.

மின் துண்டிப்பு நெருக்கடி, எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கண்டித்தே இந்தத் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...