” நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்துக்கு எடுத்து, வாக்கெடுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.”
இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கோரிக்கை விடுத்தார்.
” நாடாளுமன்றத்தில் நாடகமாடும் குழுக்களின் உண்மை முகம் நேற்று அம்பலமாகியுள்ளது. 65 பேர்தான் நாட்டு மக்கள் பக்கம் நிற்பது தெரியவந்தது.
எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வாக்கெடுப்புக்கு வரட்டும். அப்போது மேலும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மக்கள் விரோ சக்திகள் யார் என்பதும் தெரியவரும். எனவே, விரைவில் விவாதத்தை நடத்தவும். என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாம் மக்கள் பக்கமே நிற்போம்.” – என்றும் சஜித் குறிப்பிட்டார்.
அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை குண்டு தாக்குதலையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.
#SriLankaNews