ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரேரணைகள் மண்கவ்வும்! – ஜோன்ஸ்டன் சூளுரை

Share

பிரேரணைகள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மைப் பலம் இல்லாத சஜித் அணியினர் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமானது.

எமது அரசுக்கு எதிரான பிரேரணைகள் தோற்கடிக்கப்படும் என்றும் தெரிந்தும்கூட பிரதான எதிரணியினர் ஏன் அதனைக் கொண்டுவர முயல்கின்றனர் என்று புரியவில்லை.

என்னதான் நடந்தாலும் பிரேரணைகள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது. எமது அரசைக் கவிழ்க்க முயல்வோர் முதலில் தமது நிலையை உணரவேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...