sri lanka curfew
இலங்கைசெய்திகள்

ஒக்ரோபர் வரை ஊரடங்கை நீடிக்குக! – மருத்துவ சங்கம் கோரிக்கை

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை நீடிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரங்கின் மூலம் நேர்மறையான தாக்கத்தை இலங்கை காணத் தொடங்கியுள்ளது.

எனினும் நாடு சிவப்பு வலயத்திலிருந்து  மீளவில்லை. தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட வண்ணம் உள்ளனர்.

ஒட்டு மொத்த பலன்களையும் பெற வேண்டுமாயின் இந்த பயணக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதுள்ள ஊரடங்குச் சட்டத்தை இம் மாதம் 23 ஆம் திகதிவரை நீடித்தால் 8 ஆயிரத்து 500 உயிர்களைக் காப்பாற்றலாம். ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீடித்தால் 10 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

தற்போதைய கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் நோய் தீவிரமடைந்து பரவுவதற்கான அதிக வாய்ப்புள்ளது எனவும் அந்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...