dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படாது!

Share

” கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும் என எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” – என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

” அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 25 பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் இந்த ஏதேச்சதிகார செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

போராட்டம் நடத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதனை ஒடுக்க முற்படுவது ஜனநாயக விரோதச்செயலாகும். கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் திட்டம் உள்ளதா..” என சஜித் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர்,

” அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை எமது அரசாங்கம் பாதுகாக்கும். உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. தனி நபருக்குரிய உரிமை, ஏனையவர்களின் உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது, சாதாரண சட்டமே பயன்படுத்தப்படும். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...