image 6483441
இலங்கைசெய்திகள்

வாழ்நாள் பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் மறைவு!

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற இரசாயனவியல் பேராசிரியரும், இரசாயனவியல் துறையின் முன்னாள் துறைத் தலைவருமாகிய பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் கடந்த 17 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை லண்டனில் காலமானார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது விஞ்ஞானமானி (சிறப்புப்) பட்டத்தை 1968 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்த பின்னர் 1972 இல் பிரித்தானியா ஷெஃவீல்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றார்.

1976 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் துறையில் விரிவுரையாளராக இணைந்து கொண்ட திருமதி மகேஸ்வரன் இத்துறையைக் கட்டியெழுப்புவதில் அரும்பணியாற்றி 1986 இல் பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டு 1993 இல் சிரேஷ்ட பேராசிரியரானார்.

தமிழர் தாயகத்தின் மிகவும் சவாலான காலப்பகுதிகளில் துறைத்தலைவராகப் பலமுறைப் பணியாற்றி இரசாயனவியல் கல்வியின் தரத்தை உரிய முறையில் பேணியவர்.

தற்போதைய வவுனியாப் பல்கலைக்கழகமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இருந்த சமயத்தில் அதன் முதல்வராக 2003 தொடக்கம் 2006 வரை கடமையாற்றியுள்ளார்.

2010 இல் பல்கலைக்கழக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின் இலண்டனில் வசித்து வந்த பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரன் கடந்த 17 ஆம் திகதி, ஞாயிற்றுக் கிழமை அன்று காலை காலமானார்.

இவரது சேவையைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2010 இல் இவருக்கு தகசார் பேராசிரியர் பதவியை வழங்கி கௌரவித்திருந்தது. பேராசிரியர் திருமதி இராஜேஸ்வரி மகேஸ்வரனும் அவரது கணவரான அமரர் பேராசிரியர் சி. மகேஸ்வரனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் சேவை ஆற்றினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...