3 12
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

Share

கடவுச்சீட்டு பெற வரும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்டுள்ள பெரும் சிக்கல்

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் மாணர்வகளை கடவுச்சீட்டு பெற அனுப்புவதால், அந்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.

அதன் காரணமாக குறித்த மாணவர்கள், கடவுச்சீட்டு பெறுவதற்குத் தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தலைமை அலுவலகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு, சில மாணவர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகத்திற்கு பிரவேசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவ்வாறன சூழ்நிலைகளில் திணைக்கள அதிகாரிகள் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...