8 54
இலங்கைசெய்திகள்

அநுர அரசில் தொடரும் கைதுகள்: பிணையில் சென்ற முன்னாள் முக்கிய அதிகாரி

Share

இன்று (30) பிற்பகல் கைது செய்யப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் , 200,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த குமார மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு குருநாகலில் சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுவதற்காக நடைபெற்ற இசுரு சவிய கொண்டாட்டத்திற்காக கூட்டுறவு நிதியிலிருந்து பணம் செலவழித்தது தொடர்பாக சந்தேகநபரான பிரியந்த மாயாதுன்னே குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையொன்றை நடத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து, விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் அனுப்பிய பின்னர், சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க போதுமான உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த நேரத்தில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய பிரியந்த குமார மாயாதுன்னே, இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...