24 664ab8abc1801
இலங்கைசெய்திகள்

சஜித்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஜனாதிபதி செயலகம்

Share

சஜித்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஜனாதிபதி செயலகம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி செயலகம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகம், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் ஊடாக பெருமளவு பணம் செலவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு எதிராக கூடுதலாக பிரச்சாரம் செய்யப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆளும் கட்சியினரதும், தேசிய மக்கள் சக்தியினதும் பிரதான எதிரியாக சஜித் மாறியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் கல்வித் தகைமை தொடர்பில் அவர் ஏற்கனவே மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுக்கொள்ளாத பல தலைவர்கள் நாட்டை சரியான முறையில் வழிநடத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....