17 14
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி:ஜனாதிபதியின் விசேட முகநூல் பதிவு

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி:ஜனாதிபதியின் விசேட முகநூல் பதிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் விசேட பதிவொன்றை இட்டுள்ளார்.

தம்முடன் இணைந்து செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பம் முதலே தம்முடன் இணைந்து கொண்டு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், உங்களின் ஆதரவினால் நாம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போது நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள் என கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய போது எனது திட்டத்தை நம்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

என்னுடன் இணைந்து கொண்டு நீங்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு நன்றி பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் தம்முடன் இணைந்து கொள்ளும் அனைவரையும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

தமது பயணத்தில் இடையில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக கூறியுள்ளார்.

இதுவரையில் இணைந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமது பயணத்தில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்து காத்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக உங்களது அர்ப்பணிப்பு மற்றும் சரியான தீர்மானம் எடுப்பதற்கான உங்களது தைரியத்திற்காக நான் இறுதியாக நன்றி பாராட்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சி தங்களது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ள பின்னணியில் ஜனாதிபதி இந்த விசேட முகநூல் பதிவினை இட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...